search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வயிற்று வலி"

    • சோனியா காந்திக்கு அடிக்கடி வயிற்று வலி வருவது வழக்கம்.
    • மன உளைச்சலில் நேற்று வீட்டில் தனது புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே அம்மாவாசை பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கூத்தன். இவரது மனைவி சோனியாகாந்தி (வயது 26) இருவருக்கும் இடையில் 7 வருடம் முன்பு திருமணம் நடந்தது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சோனியா காந்திக்கு அடிக்கடி வயிற்று வலி வருவது வழக்கம். வயிற்று வலியால் பெரிதும் அவதிப்பட்டு வந்த சோனியாகாந்தி மன உளைச்சலில் நேற்று வீட்டில் தனது புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அக்கம்பக்கம் உள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த சோனியா காந்தியின் தந்தை கலியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    • தியாகதுருகம் அருகே 3 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டார்.
    • இவரது கணவர் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே உடையநாச்சி கிராமத்தைச் சேர்ந்த மயிலவன் மனைவி விஜயலட்சுமி (வயது 22) இவரது கணவர் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் வயிற்று வலியின் காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது பருத்தி வயலுக்கு சென்றவர் அங்கு இருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டார். தொடர்ந்து தனது தந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் பூச்சி மருந்து குடித்து விட்டதாக கூறியுள்ளார். தகவல் அறிந்த இவரது அண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது அங்கே மயங்கி நிலையில் கிடந்தார்.

    அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு விஜயலட்சுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து மணிவேல் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

    • விக்கிரவாண்டி அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
    • இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி ஒன்றியம் மதுரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் வயது 60. விவசாயி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததன் காரணமாக கடந்த சம்பவத்தன்று தாங்க முடியாமல் வயிற்று வலி ஏற்பட்டதால் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.

    • திருவெண்ணைநல்லூர் அருகே குருணை மருந்து குடித்து 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று வீட்டில் இருந்த குருணை மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.

    விழுப்புரம் :

    திருவெண்ணைநல்லூர் அருகே கடுத்தாட்கொண்டூர் பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி. அவரது மனைவி ஜெயந்தி (வயது 38). இவருக்கு முன்னதாகவே தீராத வயிற்று வலி இருந்தது. நேற்று ஜெயந்தி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். மன உளைச்சலில் இருந்த ஜெயந்தி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் குருணை மருந்து எடுத்து குடித்துவிட்டு மயங்கி நிலையில் கிடந்தார். இதை அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ஜெயந்தி இறந்தார்.

    இதுகுறித்து திரு வெண்ணை நல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெ க்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போன்று திருவெண்ணை நல்லூர் அருகே கொத்தனூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (24) இவர் விழுப்புரம் ஸ்ரீராம் பைனான்சில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 2 வருடம் ஆகிறது 10 மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் இவருக்கும் வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று வீட்டில் இருந்த குருணை மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு முண்டியம் பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக வெங்கடேசன் இறந்தார். இதுகுறித்து வெங்க டேசன் மனைவி சத்யா திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன், தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

    ×